சர்க்கார் விஜய்க்காக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள் !
தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்றது. மிகவும் பிரம்மாண்டமாக நடந்த இசைவெளியீட்டு விழாவில், நடிகர் விஜய் தமிழக அரசியல் பற்றி தெரிவித்த கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் சர்ச்சைக்குரிய கருத்தாக மாறியுள்ளது.
இது மட்டும் இல்லாமல் ,"வேலியில் போன ஓணானை வேட்டியில் விட்ட கதையாக" காமெடி நடிகரான கருணாகரன், தனது ட்விட்டர் பக்கத்தில் தான் நடிகர் விஜய்யை வெறுப்பதாகவும், அவர் கூறும் அறிவுரைகள் அரசியல்வாதிகளுக்கு மட்டும் போல தான் , நடிகர்களுக்கு இல்லையா, உங்கள் ரசிகர்களிடம் பேச வேண்டாம் என கூறுங்கள், அவர்கள் கேட்கிறார்களா என்று பார்ப்போம் என பதிவிட்டார். அவரின் இந்தக் கருத்து விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்திவிட்டது . இதனையடுத்து, விஜய் ரசிகர்களுக்கும் கருணாகரனுக்கும் இடையே சமூக வலைத்தளத்தில் வார்த்தைப் போர் மூண்டது. இதில் கருணாகரன் தமிழரே இல்லை என்றும் அவர் ஆந்திராவைச் சேர்ந்தவர் என்றும் விஜய் ரசிகர்கள் கூற, அதற்கு கருணாகரன், நான் தமிழ்நாட்டில் தான் பிறந்தேனா என முட்டாள் தனமான கேள்விகளைக் கேட்க வேண்டாம், உங்கள் தளபதி நடிக்கும் படத்தின் பெயர் "சர்கார்" என்பது தமிழ் தலைப்பா? என பதிவிட்டார்.
இதனால் கடும் கோபத்தில் உள்ள விஜய் ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் அவரை கண்டபடி திட்டி தீர்த்து வருகின்றனர் . இதில் ஒரு சில ரசிகர்கள் கோவத்தின் உச்சத்திற்கு சென்று, கருணாகரனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் உருவாக்கியுள்ளனர் .
எதற்கு இந்த வேண்டாத வேலை இந்த கருணாகரனுக்கு . தான் இது .
நன்றி மக்களே..
#sarkar , #sarkaraudiolaunch ,#vijay
சர்க்கார் விஜய்க்காக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய ரசிகர்கள் !
Reviewed by Vaigai Tamil
on
October 07, 2018
Rating:
No comments: