பாவம் AR முருகதாஸ் ! சர்க்கார் மட்டுமில்லை கத்தி படத்தின் கதையும் திருட்டு கதையாம் !
AR முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படத்தின் ரீமேக் உரிமையை விற்பதற்கு தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
கத்தி, துப்பாக்கி போன்ற தொடர் வெற்றிப்படங்களைத் தந்த AR #முருகதாஸ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் #சர்கார். தீபாவளிக்கு இப்படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், #சர்கார் படத்தின் கதை , செங்கோல் படத்தின் கதை என வருண் என்கிற ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இது தொடர்பான விசாரணை தற்போது நடந்து வருகிறது. இதனால் திட்டமிட்டபடி #சர்கார் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதேபோல், கடந்த ஆண்டு ரங்கதாஸ் என்பவர் 'கத்தி' படத்தின் கதை தன்னுடையது என்றும் தனது கதையைப் படமாக எடுத்த முருகதாஸ் தனக்கு எந்த அங்கீகாரத்தையும் அளிக்கவில்லை என்றும் புகார் அளித்திருந்தார். மேலும் தெலுங்கில் 'கத்தி' படத்தை ரீமேக் செய்து, அதன் உரிமைகளையும் விற்றுவிட்டதாக குற்றம் சாட்டினார். அந்த வழக்கின் தீர்ப்பு வரும்வரை மற்ற மொழிகளில் 'கத்தி' ரீமேக் உரிமைகளை விற்கத் தடை விதிக்கக் கோரியிருந்தார். தற்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.சுந்தர் 'கத்தி' ரீமேக் உரிமைகளை விற்க இடைக்காலத் தடை விதித்துள்ளார்.
இதுதொடர்பான புகார்களை முருகதாஸ் மற்றும் லைகா தயாரிப்பு நிறுவனம் மறுத்து, எதிர் மனு தாக்கல் செய்துள்ளது. இதுமட்டுமில்லை சர்கார் பட வழக்கு அக்டோபர் 30ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது .
சர்க்கார் போச்சு ! இனி கத்தி என்ன ஆகுமோ ! பாவம் முருகதாஸ்..
#sarkar,#armurugadoss,#murugadass,
பாவம் AR முருகதாஸ் ! சர்க்கார் மட்டுமில்லை கத்தி படத்தின் கதையும் திருட்டு கதையாம் !
Reviewed by Vaigai Tamil
on
October 28, 2018
Rating:
No comments: