கசிந்து சர்க்கார் !!
கசிந்து சர்க்கார்…!!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்-கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள #சர்கார் படத்தின் கதை கசிந்து விட்டது என்று கூறப்படுகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்-கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள #சர்கார் படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இந்த படத்தின் கதை திருடப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சர்கார் கதை கசிந்து விட்டதாக பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ள கதை இதுதான்..
அமெரிக்காவில் வசிக்கும் மிகப்பெரிய தொழில் அதிபர் விஜய்க்கு பல்வேறு நாடுகளில் நிறுவனங்கள் உள்ளன. தமிழரான அவருக்கு தமிழகத்தில் வாக்குரிமை இருக்கிறது. சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்காக சென்னை வருகிறார். வாக்கு சாவடிக்கு சென்று ஓட்டை பதிவு செய்ய செல்லும் போது, வாக்குச்சாவடியில் இருப்பவர்கள் உங்கள் ஓட்டு ஏற்கனவே பதிவாகி விட்டது என்கின்றனர்.இதனால் தோல்வியையே சந்திக்காத விஜய்க்கு முதல் முறையாக பெருத்த அவமானம் ஏற்படுகிறது. தேர்தல் முறைகேடுகளை பார்த்து கொதித்து போன விஜய் அரசியல்வாதிகளான ராதாரவி, வரலட்சுமி ஆகியோரை எதிர்க்கிறார்.
எனவே இளைஞர் பட்டாலத்தை திரட்டுகிறார். பணம் வாங்காமல் ஓட்டு போடுமாறும், படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் மக்களிடையே பிரசாரம் செய்கிறார். இதனால் அவருக்கு ஆதரவு பெருகுகிறது. பணம்கொடுத்து வாக்காளர்களை வளைக்க அரசியல்வாதிகள் கண்டெய்னர்களில் பணத்தை இறக்குகின்றனர்.
அதை தடுக்கும் விஜய்யை கொல்ல சதி திட்டம் போடப்படுகிறது.அதை எதிர்கொண்டு நேர்மையாக தேர்தல் நடத்தி நல்ல அரசியல்வாதிகளை தேர்ந்தெடுக்க வைத்து நாட்டை எப்படி சீரமைக்கிறார் என்பது தான் இந்த படத்தின் கதை என்று கூறப்பட்டு வருகிறது.
நல்ல கதைதான். தமிழகத்திற்கு தேவை..
உங்கள் கருத்துக்களை கீழே பகிரவும்..
#sarkar,#sarkarstory,#vijay
கசிந்து சர்க்கார் !!
Reviewed by Vaigai Tamil
on
October 22, 2018
Rating:
No comments: