நடிகையின் குழந்தையை கவனிக்க ரூ 1,00,000 சம்பளம் !!
இந்தியில் பிரபல நடிகை கரீனா கபூரும், நடிகர் சயீப் அலிகானும் காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு தைமூர் அலிகான் என்ற மகன் இருக்கிறான். இவர்களின் குழந்தையை கவனித்துக்கொள்ள கரீனா கபூர் டைமுர் அலி என்ற பெண் ஒருவரை நியமித்து உள்ளார்.
இதில் என்ன அதிர்ச்சி என்றால் அந்த குழந்தையை பார்த்துக்கொள்ளும் டைமுர் அலிக்கு மாதம் ரூ.1½ லட்சம் சம்பளம் கொடுக்கிறார் கரீனா , குழந்தையை கவனித்துக்கொள்ள இந்த பெண்ணை தேர்வு செய்யும் முன்பு பெரிய அளவில் நேர்முக தேர்வு நடத்தினார். நிறைய குழந்தை வளர்ப்பு நிபுணர்களெல்லாம் இதில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களில் இருந்து கடைசியாக இந்த டைமுர் என்ற பெண்ணை தேர்வு செய்து இருக்கிறார்.
ஒரு வினாடிகூட விலகாமல் குழந்தையை அவர் கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ள வேண்டும். கரீனா கபூர் எங்கு சென்றாலும் குழந்தையோடு சேர்ந்து அந்த பெண்ணும் செல்ல வேண்டும். வெளிநாட்டிற்கு சென்றாலும் கூட உடன் போகவேண்டும். இதற்காக சம்பளம் தவிர்த்து சிறப்பு சலுகைகள் நிறைய உண்டு.
படப்பிடிப்பை முடித்துக்கொண்டு கரீனா வீட்டுக்கு வந்ததும் அந்த பெண் அவரது வீட்டுக்கு செல்ல தனியாக காரும், டிரைவரும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். இவ்வளவு வசதி செய்துகொடுத்து இருப்பது ஆச்சரியமாக தெரியலாம். ஆனால் பிரபலங்கள் வீடுகளில் இதெல்லாம் சகஜம் தானே.
1 லட்சமா!! எனக்கும் இந்த மாதிரி வேலை கிடைச்சா நல்லா இருக்கும் போலனு தோணுதா.கீழ கமெண்ட் பண்ணுங்க.
நன்றி மக்களே...
நடிகையின் குழந்தையை கவனிக்க ரூ 1,00,000 சம்பளம் !!
Reviewed by Vaigai Tamil
on
October 14, 2018
Rating:
No comments: