சரவணா ஸ்டோர் உரிமையாளர் மனைவிக்கும் பாஜக கட்சிக்கும் என்ன சம்பந்தம் !

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருளை தெரியாதவர்கள் தமிழகத்தில் இருக்க வாய்ப்பில்லை அந்த அளவிற்கு தமிழகம் முழுவதும் தனது விளம்பரத்தால் பிரபலமாகியுள்ளார் சரவணன் அருள்.



தமிழகத்தின் மிகவும் பிரபலமான வணிக நிறுவனம் தான்  சரவணா ஸ்டோர்ஸ் , திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து சென்னை வந்த சரவணன் அருளின் தந்தையும் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனரும் ஆனா சரவணா செல்வரத்தினம், கடுமையாக உழைத்து சரவணா ஸ்டோர்ஸ் என்ற ஜவுளி கடையை உருவாக்கினார் அதில் தான் நல்ல நிலைக்கு வந்ததும் தனது சகோதரர்கள் ஆன யோகரத்தினம் மற்றும் ராஜரத்தினத்தை சென்னைக்கு அழைத்துவந்து தனது நிறுவனத்தில் சேர்த்துக்கொண்டார்.
அவர் இறந்த பிறகு சகோதரர்களுக்குள் சண்டை வந்ததால் சொத்துக்கள் பிரிக்கப்பட்டது தற்போது லெஜெண்ட் சரவணா என்ற பெயரில் சரவணன் அருள் நடத்தி வருகிறார்.


இவர் ஆரம்ப காலத்தில் விளம்பரங்களில் நடித்தபோது பல விமர்சனங்களை சந்தித்தார் ஆனால் அதை காதில் வாங்காமல் தொடர்ந்து நடித்ததன் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார், இவர் பல சமூக பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 கோடி ரூபாய் கொடுத்தது குறிப்பிடத்தக்கது மேலும் இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் அவர்கள் இருவருக்குமே திருமணமாகிவிட்டது.
இவர் தனது மனைவி மற்றும் மகள்களுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவியது லெஜெண்ட் சரவணா ஸ்டோர் உரிமையாளர் அருள் அவர்களின் மனைவி, பாஜக மாநில தலைவர் தமிழிசையின் நெருங்கிய ரத்த சொந்தம் ஆகும். தமிழிசையின் தாயாரும், அருள் மனைவி அவர்களின் தாயாரும் சின்னம்மா உறவு முறையாகும் என்றும் தெரியவந்துள்ளது .
சரவணா ஸ்டோர் உரிமையாளர் மனைவிக்கும் பாஜக கட்சிக்கும் என்ன சம்பந்தம் ! சரவணா ஸ்டோர் உரிமையாளர் மனைவிக்கும் பாஜக கட்சிக்கும் என்ன சம்பந்தம் ! Reviewed by Vaigai Tamil on November 01, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.